செவ்வாய், 21 மார்ச், 2017

அப்பா கவிதை. .20

அப்பா கவிதை. .20

+++++++++++++++++
எதை கொடுத்தாலும்
ஈடு கொடுக்கமுடியாத
சொர்க்கம்.
அப்பாவுடனான குழந்தை பருவம்.

ஊர்திருவிழாவில்
அப்பாவின் ஒற்றை தோளில்
அமர்ந்தபடி சாமி ஊர்வலம்.

கூட்டநெரிசலில்
குழந்தைக்கு சேதாரமின்றி
பாதுகாப்பாய்..

சாமியின் தெய்வ தரிசனம்
சேதாரமின்றி முழுமையாய்
குழந்தைக்கு. .

திருவிழா
கூட்டத்தில் கேட்டதை
வாங்கி தரமறுக்கும்
அப்பாவிடம் வெற்றி பெற்று
விடுகிறது.

அழுதோ..
அடம்பிடித்தோ..
அழகாய் சிரித்தோ..

அப்பாவுடனான
குழந்தை பருவம்
சொர்க்கம். .

^^^^^^^^^^^^^^^^^^^^^^^

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக