அப்பா கவிதை. .20
+++++++++++++++++
எதை கொடுத்தாலும்
ஈடு கொடுக்கமுடியாத
சொர்க்கம்.
அப்பாவுடனான குழந்தை பருவம்.
ஊர்திருவிழாவில்
அப்பாவின் ஒற்றை தோளில்
அமர்ந்தபடி சாமி ஊர்வலம்.
கூட்டநெரிசலில்
குழந்தைக்கு சேதாரமின்றி
பாதுகாப்பாய்..
சாமியின் தெய்வ தரிசனம்
சேதாரமின்றி முழுமையாய்
குழந்தைக்கு. .
திருவிழா
கூட்டத்தில் கேட்டதை
வாங்கி தரமறுக்கும்
அப்பாவிடம் வெற்றி பெற்று
விடுகிறது.
அழுதோ..
அடம்பிடித்தோ..
அழகாய் சிரித்தோ..
அப்பாவுடனான
குழந்தை பருவம்
சொர்க்கம். .
^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக