அப்பா கவிதை. ..24
*****************
மிதிவண்டியின் முன்புறம் அப்பாவின் கைகளுக்குள் பாதுகாப்பாய் பயணிக்கையில்,
கூந்தலை கலைக்காமல்
முகத்தில் மட்டும் உறவாடும் மெலிதான காற்று.
ஒருவர்கூட சாலையை கடக்காதபோதும்
மிதிவண்டியின் மணியை அடித்து பார்க்கும் சந்தோசம்.
பிறந்தநாளன்று
குடும்பத்தோடு கோவிலில் சின்னதாய் ஒருபூஜை
ஒழுங்கற்று நொறுக்கிய
தேங்காய் துண்டு
ஒழுங்காய் நறுக்கிய
வாழைப்பழம் பிரசாதமாய்.
பழையதுதான் ஆனாலும் ,
அடிக்கடி புதுப்பிக்கப்பட்டு எப்போதும் புதியதாய் புத்தகப்பையும்
பள்ளி சீருடையும்.
பொருளாதார பற்றாக்குறையிலும் வசதியாய் வாழும் திறமை படைத்தவர்...
திறன் வளர்த்தவர்...
அப்பா. .. ÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக