அப்பா கவிதை ...18 `~`~`~`~`~`~`~`~`~`~`
தான் கடந்து வந்த
வயதுகளில்
அப்பாவிடம்
கேட்டிருக்கவேண்டிய பல கேள்விகளை
கேட்காமலேயே தவற விட்டிருக்கிறோம்!
ஆரம்பக்கல்வி வகுப்பறையில்
அமர வைத்த அப்பா. ...
மகிழ்ச்சி தருணங்களை
உருவாக்கி கொடுத்த அப்பா. ..
பசி தெரியாமல் புசிக்க வைத்த அப்பா. ..
சந்தோசத்தை மட்டுமே கண்விழியில் காட்டிய அப்பா. ..
எதிர்மறை பலன்கள்...
நேர்மறை விளைவுகள். .. அனுபவங்களை கட்டி கொடுத்த அப்பா. ..
நடந்த பாதையில்
அப்பாவிடம் கேட்டிருக்கவேண்டிய எண்ணற்ற கேள்விகளை எண்ணாமலேயே இருந்திருக்கிறோம்.!!
அப்பா ,
அறுபது வயதை கடந்த பின்னாலாவது,
ஒற்றை கேள்வியை ஒவ்வொரு நாளும் கேட்டு வையுங்கள்.
"அப்பா சாப்பிட்டீர்களா?" என்று.
=_=_=_=_=_=_=_=_=_=_=_=__=_=_
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக