செவ்வாய், 21 மார்ச், 2017

அப்பா கவிதை. ..19

அப்பா கவிதை. .19

÷×÷×÷÷÷÷=÷÷÷÷÷÷÷÷÷

பரிதாபத்திற்குரியவரா
அப்பா!!

பட்டிமன்ற பேச்சாகளின் அகராதியில்
பிள்ளைதூக்கி பெருமாள்கள்.

நகைச்சுவை
எழுத்தாளருக்கு
மனைவியிடம்
அடிவாங்கும் கணவன்.

திரைப்படங்களில்
காதலனை திட்ட
ஒரு கதாபாத்திரம்.

மகனின்
நட்பு வட்டாரத்தில்
நாகரிக மாறுதல்
தெரியாத பழையவாதி.

சுயமரியாதை
பாழ்படுத்தும் 
உணர்ச்சி தேமல்கள் எதையும்
வெளிபடுத்தி கொள்வதில்லை
அப்பாக்கள். .

இருப்பினும்
குடும்ப வெளிச்சற்க்காக
சகலத்தையுமா தாரைவார்ப்பது?
என்ற முதியோர் இல்ல
அறைத்தோழனின் கேள்விக்கு
கண்களை கழுவித்தான்
உணர்ச்சிகளை வெளிகாட்ட முடிகிறது.

அப்பாக்கள்
பரிதாபத்திற்க்குரியவரா?..

###################

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக