செவ்வாய், 21 மார்ச், 2017

அப்பா கவிதை. ..15

அப்பாவின் கவிதை. ..15

₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹

ஒழுங்கீடற்ற நேரத்தில் நண்பர்களுடணான மகனின் ஊர்சுற்றலை கண்டிப்பார் அப்பா .

இளைஞர் என்றால் அப்படித்தான் பாச முலாம் பூசுவார் அம்மா.

நடுநிசி வரையிலான இணைய உலாவினை தடைசெய்வார் அப்பா.

வேறென்ன பொழுதுபோக்கி இருக்கிறது என அன்பு போர்வை போர்த்துவார் அம்மா.

பெரும்பாலான அப்பாக்கள், அப்பாவின் அருமையை
மகனுக்கு உணர வைக்கும் ஒவ்வொரு முறையும்,
அன்புகாட்டி மறைத்து விடுகிறார்கள்
சில அம்மாக்கள்.

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக