அப்பா கவிதை....25 ~~~~~~~~~~~~~~~~~~~~ தொழிலதிபரான அப்பா
பல தொழில்களுக்கு அதிபராக்குகிறார்
தன் மகனை.
மருத்துவமே படிக்காத மகனுக்கு பல்துறை மருத்துவமணை கட்டிகொடுத்து அமர வைக்கிறார் மருத்துவரான அப்பா. .
அதிக மழையிலும் அதிக வெயிலிலும் பழாய்போகிறது. தள்ளுவண்டியில் காய்கறி விற்பவரின் வியாபாரமும் வருமானமும்.
மகனுக்காவது நிச்சய வருமானம் கிடைக்க உயர்கல்வி படிக்க வைக்கிறார். .
ஆயுள்முழுக்க கடனோடு போராடும் உலகுக்கு உணவளிக்கும் விவசாயி.
மகனாவது வெள்ளை உடுப்பு வேலைபெற வெயிலில் உழைக்கிறார் ..
வசதி'பெற்ற' அப்பாக்களின் வசதி'யற்ற' அப்பாக்களின் ஆசைகள் அனைத்தும்
மகன்கள் வசதியாய் வாழவேண்டுமென்ற
ஒற்றை புள்ளியிலே
மொத்தமாய் குவிகின்றன.
தன்காலடியை இருளாக்கிக்கொண்டு குடும்பத்திற்கு வெளிச்சம் கொடுக்கும் மெழுகுவர்த்திகள் அப்பாக்கள். . ######################
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக