செவ்வாய், 21 மார்ச், 2017
அப்பா கவிதை. ..14
அப்பா கவிதை. .14
''''''""""""""""""""""""""" போற்றுவதற்குரியவர்
அப்பா. ..
தூற்றுவதற்குரியவர் அல்ல..
விரல் பிடித்து நடந்த
குழந்தை பருவம்.
கைபிடித்து ஓடிய
சிறுவன் பருவம்.
ஆச்சரியமுட்டிய அரிதான
அவதாரமாக தெரிந்தார் அப்பா. .
இருபதுகளின் ஆரம்பம்முதல்
இறுதிவரை,
சந்தோச கதவின் பூட்டுகள்
வளர்ச்சியின் வேகதடைகள் என்றே
அப்பாக்களை தவறாக அடடையாளப்படுத்தி உள்செலுத்தி வைத்திருக்கிறது
சமுக கவர்ச்சிகளும்
திரைபடங்களும்.
சில பிள்ளைகள் முப்பதின் ஆரம்பத்திலும்
சிலர் அறுபதுகளின் முடிவுகளிலும்தான்
அப்பாவின் அருமையை
அறிந்து கொள்கிறார்கள்.
அப்பாவின் மீதான ஐப்பிராயங்கள்
அடிக்கடி உருமாறிக்கொள்கின்றன
பிள்ளைகளின் மனதில்.
தம் பிள்ளைகள்
ஒழக்க வளர்ச்சியிலும்
அறிவு முதிர்ச்சியிலும்
திறன்படவேண்டும் என்பதில்
மறுமதிப்பீடு செய்துகொள்வதில்லை.
எந்த வயதிலும்,
எந்த அப்பாவும்.
போற்றுவதற்குரியவர் மட்டுமல்ல
வணங்குவதற்கரியவரும்
அப்பாதான்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக