திங்கள், 20 மார்ச், 2017

"கண்ணதாசன் " பற்றிய கவிதை

அகிம்சையும் வாய்மையும்
 அறிந்து கொள்ள வேண்டுமா?
 காந்தியை படியுங்கள். 
சில மாதங்கள் போதும்!

 அமைதியும் ஆன்மிகமும்
 அறிந்து கொள்ள வேண்டுமா? விவேகானந்தரை படியுங்கள்.
 சில ஆண்டுகள் போதும்!

 கலாச்சாரமும் நாகரீகமும்
 அறிந்து கொள்ள வேண்டுமா?
 கண்ணதாசன் கட்டுரை படியுங்கள். 

இலக்கியமும் வாழ்வியலும்
 அறிந்து கொள்ள வேண்டுமா?
 கண்ணதாசன் நாவலை படியுங்கள்.

 தாலாட்டு முதல் ஒப்பாாி வரை
 உணா்வுகளை உணா்ந்து கொள்ள கண்ணதாசன் பாடல்களை நுகருங்கள்.

 இதற்காக அதிக பட்சம் ஓா் ஆயுளை பயன்படுத்த வேண்டியதிருக்கும்.
 அவரே கண்ணதாசன்.

 எல்லாம் இருக்கும்
 எல்லாம் கலந்த
 கலவை பொக்கிஷம் கண்ணதாசன்.

 சுக துக்கங்கள் நிரம்பி வழிபவையே
 நல் வாழ்க்கை. 
ஒவ்வொரு காலகட்டத்திலும்
 ஒவ்வொரு வகை உணா்வுகள்.
 நம்முடன் உடன் பயணிப்பவை.

 ”அத்தைமடி மெத்தையடி” யில்
 தாலாட்டு. 

”சோதனை மேல் சோதனை” யில் 
சோகம்.

 ”உள்ளம் என்பது ஆமை” யில்
 தத்துவம். 

”எங்களுக்கும் வாழ்வு வரும்”-ல் 
சந்தோசம்.

 ”ஆறு மனமே ஆறு” வில்
 நிம்மதி. 

”யாரை நம்பி நான் பிறந்தேனி”ல் 
ஆற்றாமை.

 ”வானில் முழு மதி”யில்
 அழகு.

 ”அத்திக்காய் காய் காய்“ யில் 
சிலேடை. 

”ஆட்டுக்குட்டி முட்டையி்ட்டு”வில் 
நகைச்சுவை. 

”சொன்னாலும் வெட்கமடா”வில் 
சஞ்சலம்.

 ”எட்டடுக்கு மாளிகை”யில் 
ஒப்பாாி. 

”பூஜ்யத்துக்குள்ளே ஒரு ராஜ்யத்தில்”
 ஆன்மிக தேடல்.

 சற்று அதிகப்படியாக காதலில்
 ”கண்ணெதிரே தோன்றினானில்”
 காதலில் மகிழ்ச்சி. 

”கடவுள் மனிதராக“வில் 
காதலில் கோபம்.

 ”நிலவை பாா்த்து வானம் சொன்னதில்” காதலில் ஏக்கம். 

“அவளா சொன்னாளில்” 
காதலில் நம்பிக்கை.

 எல்லாம் உண்டு. 
இல்லை என்பதில்லை.
 எல்லாம் உண்டு கண்ணதாசனில்.

 எல்லாம் கலந்த கலவை பொக்கிஷம் கண்ணதாசன்.

 ”வெயில்காலம் வந்துவிட்டது என்பதற்காக கொக்கு கவலைபடக்கூடாது.
 அதோ மழைக்காலம் வருகிறது!”

 ”மழைக்காலம் வந்துவிட்டது என்பதற்காக நதிகள் ஆா்பாிக்ககூடாது.
 அதோ வெயில் காலம் வருகிறது”.

 கண்ணதாசனின் சிந்தனை வாிகள். நிலையற்றது வாழ்க்கை.

 உச்சகட்ட மகிழச்சியின்போது 
ஆா்ப்பாிப்பதும்
 அதிக பட்ச தோல்வியின்போது
வீழ்ந்து போவதும் அா்த்தமற்றவை.

 சிலவாிகளில்
வாழ்க்கை நிலையாண்மையை
 நிலையாய் சொன்னவா் கண்ணதாசன்.

 எளிய வடிவம் பெற்ற
 சித்தா் பாடல்கள்.
 புதிய ரசனைமிக்க கருத்தை பிரசவிக்கும் திருக்குறள்கள்.
 காதலுக்கு அழகூட்டும் 
புறநானுாற்று பாடல்கள்.
 கண்ணதாசன் எளிய தமிழா்களுக்கு அள்ளிகொடுத்த இலக்கியங்கள்.

 கீதையில் கண்ணன் சொன்னதைவிட கண்ணதாசன் சொன்னதுதான்
 அதிகம் பேருக்கு
அா்த்தம் புாிந்தது.

 அதிகம் அா்த்தமுள்ள இந்துமதம் கண்ணதாசனால்
 மேலும் அதிகம் அா்த்தமுள்ளதாக பளபளக்கிறது.

 திரும்பி பாா்க்கையில் 
அதிசயித்து நடக்கையில் எ
ங்கும் கண்ணதாசன் 
எதிலும் கண்ணதாசன்

 எப்போதும் கண்ணதாசன்.
 எல்லாம் கண்ணதாசனால் கண்ணதாசனால்தான் எல்லாம்.

1 கருத்து:

  1. கவிதை மிக அருமை தோழரே. நம் வாழ்க்கையின் ஒவ்வொரு வயதிலும் கவிஞா் கண்ணதாசனை நினைக்காமல் கடக்க முடியாது என்பதனை மிக அழகாக கவிதையின் மூலமாக தொகுத்து கொடுத்திருக்கிறீர்கள். நன்றி

    பதிலளிநீக்கு