++++++++++++++++
அப்பாவை
போன்றதுதான்
நெடிய ஆலமரமும்..
தன்னை
தேடிவருகிறவர்களுக்கு புகலிடமும்
நாடிவருபவர்களுக்கு அடைக்கலமும்
கொடுக்கும் அப்பாவை போலத்தான்
கிளையில் பறவைகளுக்கும்
அடியில் மனிதர்களுக்கும்
ஆதரவு கொடுக்கும்
ஆலமரம்.
உறவு சுற்றத்துக்குள்ளும்
பழகிய சமுகத்திற்க்கு
வெளியிலும்
வெளிப்படையானவர் அப்பா.
உயிர் வாழ ஆதாரமான
வேர்களைகூட
வெளிகாட்டியபடி
பெருத்த ஆலமரம்.
இருப்பினும்
தன் காலடியில் புற்களைகூட
வளரவிடுவதில்லை ஆலமரம்.
தன்னை நம்பியவர்களுக்கு
வாழ்க்கையும்
வாழத்தகுதியும்
வகுத்துகொடுப்பவர் அப்பா.
நீண்டகாலம் வாழ்ந்து
நெடிந்து வளரும் ஆலமரத்தைவிட
உயர்ந்தவர்கள் அப்பாக்கள்.
>>>>>>>><<<<<<<<<<<<<>><
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக