அப்பா கவிதை .12
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
அலுவலகத்தில்
அப்பாவைக்காண
முன்அனுமதி பெற்று
பல பேர் காத்திருக்கையில்,
தன் காலில்பட்ட காயம் ஆற்ற மருத்துவமனையில் பரபரத்துக்கொண்டிருக்கிறார் அப்பா.
அழுத்தமாகவும்,
ஆழமாகவும்
வருத்த ரேகைகள் அப்பாவின் முகத்தில்.
சில தண்டிப்புகள்
பல கண்டிப்புகள்
நம்மீதான வெளிப்பாட்டின்போது அப்பா மீது கொண்டுள்ள எதிர்மறை எண்ணங்கள். ..
இப்போது நினைக்கையில்
காயம் கொடுத்த வலியைவிட அதிகமாய் வலிக்கிறது.
அற்புதமானவர்......
அப்பா. .
புரிந்துகொள்ளுங்கள்... அப்பாவை...
=============================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக