அப்பா கவிதை. .26
"""""""""""""""""""""""""
சபைதனில்
தன்திறமை வியந்து
பலர் பாராட்டுகையில்,
நன்றி எனும் மூன்றெழுத்து
ஒற்றை சொல்லை உச்சரிக்க
நாக்கு தழதழக்கும் உணர்ச்சி தருணங்களிலும்
கண்களில் தவழும் நீர் துளியை சேதாரமின்றி பெருவிரல் துடைத்தெடுக்கும் தருணங்களிலும்
இவற்றிற்கு ஆதாரமான கோட்டுருவம்
நம்கண் தோன்றும்
அவர்தான் அப்பா. """"""""""""""""""""""""""""""""""""""""""""
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக