அப்பா கவிதை ...8
●●●●●●●●●●●●●●
கோபம் இல்லாமலில்லை. இருப்பினும்
அடக்கியாள வேண்டிய சூழல்.
தன்மானம் இல்லாமலில்லை. இருப்பினும்
கூனிகுறுக வேண்டிய நிர்ப்பந்தம்.
கவலை இல்லாமலில்லை. இருப்பினும்
சிரித்தாக வேண்டிய நெருக்கடி.
மனச்சாட்சியை திறந்துவைத்த தருணங்களிலும்
திரைபோட்டு வைத்த தருணங்களிலும்
சங்கடங்களே எஞ்சங்களாய்
எஞ்சி நிற்க்கின்றன.
அன்றன்றைய நாட்களை சங்கடத்துடனும்
சகஜத்துடனும் கழிக்கிறார்கள் பெரும்பாண்மையான அப்பாக்கள்.
சங்கடங்கள்,
சகஜங்கள்
தன் பிள்ளைகள் அடைந்து விடகூடாது என்பதற்காக.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக