அப்பா கவிதை. ..17
^×^×^×^×^×^×^×^×^
தன் முதுகின்மீது
சவாரி செய்பவர்களின் சந்தோசத்திற்காக
வருத்தத்தை வெளிகாட்டாமல்
ஓடும் குதிரைகள்....
அப்பாக்கள்.
தான் வாழும் வீட்டில்
பெரிதாய் வெகுமதி
எதுவும் கிடைத்துவிடாது என்றபோதிலும்
உழவனுக்காக உழைக்கும் மாடுகள்....
அப்பாக்கள்.
"எனக்கென, என்னசெய்தார் அப்பா?"
என்ற மகனின்
ஒற்றை கேள்வியில்
நொறுங்கி பொசுங்கிபோய்விடுகிறது அப்பாவின் தியாகமும் அர்ப்பணிப்பும்.
÷×÷×÷×÷×÷×÷×÷×÷×÷×÷×÷×÷×÷×÷÷
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக