செவ்வாய், 21 மார்ச், 2017

அப்பா கவிதை. ..21

அப்பா கவிதை. ...21 ○•○○•○○○•○○○○•○○○○•

அற்புத சுகங்கள் அப்பாவுடன் நடந்த மழைநாட்கள்..

ஆரம்பபள்ளியில்
பள்ளி முடியும் நேரத்தில் ஆரம்பிக்கும் மழை..

குழந்தைகளை கூட்டிச்செல்ல கைகளில் குடைகளோடு சில அம்மாக்கள். .
பல அப்பாக்கள். .

கையில் குடைபிடித்தபடி அப்பா. அப்பா கைபிடித்தபடி நான். ஆங்காங்கே நனைந்தபடி அப்பா நனையாமல் முழுமையாய் நான்.

மழைநாளில் அப்பாவுடன் வீதிகளில் நடக்கையில்
ஓடிவந்து ஒட்டிக்கொள்ளும் கம்பீரம்.

அப்பாவுக்கு கிடைக்கும் மரியாதைகள் தனக்கே கிடைத்ததான கர்வம் .

அன்றுமட்டும்
சற்று கூடுதலாய் கிடைக்கும் இரண்டு மிட்டாய்களும்
சூடான அதிரசமும்.

மழையில் நனைந்து வீடு திரும்புகையில்
தன் முந்தானையால்
அம்மா தலை ஈரம் எடுக்கையில் பெருந்திரளாக கிடைக்கும்
இன்ப நேரங்களை விட,

மழைநாளில் அப்பாவுடன் நடக்கையில் கிடைக்கும் ஆனந்தம் அற்புத சுகங்கள். ...

%%%%%%%%%%%%%%%%%%

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக