செவ்வாய், 21 மார்ச், 2017

அப்பா கவிதை. ..11

அப்பா கவிதை 11

++++++×××++++++

அருமையானவர். ...
அப்பா.

வங்கி மேலாளர் தனது பணியறையில் உட்கார்ந்துகொண்டே ஓய்வின்றி கையொப்பம் இடுகின்றார்.

கடைத்தெருவில் காலணி தைப்பவரை
கடும்பகல் சூரியன் எவ்வித இடையூறும் செய்வதில்லை.

அமர்வதற்கு இடம்.
ஆசுவாச படுத்திக்கொள்ள நேரம். இருந்தும் நின்றுகொண்டுதான் இருக்கிறார் தேநீர் கடைக்காரர்.

புதுப்புது இடம்.
புதுப்புது சூழல்.
எல்லோரும் சந்தோசமாய்
பொழுது கழிக்கையில்
சுற்றுலா பேருந்தில் ஓய்வெடுக்கிறார் ஓட்டுநர்.

எல்லா அப்பாக்களுக்கும் குடும்பம்தான் எல்லாம்.
அப்பா..... அருமையானவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக