அப்பா கவிதை ..23 =================
அதிக தேடலுக்குப்பின்னும் அரிதாகவே தென்படுகிறார்கள் கடனில்லா அப்பாக்கள். .
தம்மைவிட
தன் குழந்தைக்கு உயர்கல்வி. செயல்படுத்த முனைகையில் முளைக்கிறது கடன் செடி....
எவ்வளவோ முயற்சித்தும் வாங்கவே முடியாமல்போன.... அருகிருந்தும் கிடைக்காமல் தவறிய...
பொருள்களை வாங்கிகொடுத்து குழந்தைகளை மகிழ்ச்சியாக்கி தானும் மகிழ்கையில்
வளர்ந்து மரமாகிறது கடன்...
கையூட்டு சம்பிரதாயங்கள் முடித்து பிள்ளைகளுக்கு வேலை, சடங்குகள் பார்த்தது பிள்ளைகளுக்கு திருமணம்..
திரும்பி பார்க்கையில் கிளைவிட்டு பரந்துகிடக்கிறது பெருத்த கடன்மரம்...
ஆங்காங்கே தேடியும் அரிதாகத்தான் தென்படுகிறார்கள் கடனில்லா அப்பாக்கள். .
பெரும்பாலான அப்பாக்கள்
தன் வாழ்நாள் முழுதும்
கிளைகளை மட்டுமே
குறைத்து கொண்டிருக்கிறார்கள்.
மரத்தை முழுவதுமாய் அகற்றிவிட முடிவதில்லை. ■●■■●■●■●■●■●■●■●■●■
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக