செவ்வாய், 21 மார்ச், 2017

அப்பா கவிதை. .20

அப்பா கவிதை. .20

+++++++++++++++++
எதை கொடுத்தாலும்
ஈடு கொடுக்கமுடியாத
சொர்க்கம்.
அப்பாவுடனான குழந்தை பருவம்.

ஊர்திருவிழாவில்
அப்பாவின் ஒற்றை தோளில்
அமர்ந்தபடி சாமி ஊர்வலம்.

கூட்டநெரிசலில்
குழந்தைக்கு சேதாரமின்றி
பாதுகாப்பாய்..

சாமியின் தெய்வ தரிசனம்
சேதாரமின்றி முழுமையாய்
குழந்தைக்கு. .

திருவிழா
கூட்டத்தில் கேட்டதை
வாங்கி தரமறுக்கும்
அப்பாவிடம் வெற்றி பெற்று
விடுகிறது.

அழுதோ..
அடம்பிடித்தோ..
அழகாய் சிரித்தோ..

அப்பாவுடனான
குழந்தை பருவம்
சொர்க்கம். .

^^^^^^^^^^^^^^^^^^^^^^^

அப்பா கவிதை. ..19

அப்பா கவிதை. .19

÷×÷×÷÷÷÷=÷÷÷÷÷÷÷÷÷

பரிதாபத்திற்குரியவரா
அப்பா!!

பட்டிமன்ற பேச்சாகளின் அகராதியில்
பிள்ளைதூக்கி பெருமாள்கள்.

நகைச்சுவை
எழுத்தாளருக்கு
மனைவியிடம்
அடிவாங்கும் கணவன்.

திரைப்படங்களில்
காதலனை திட்ட
ஒரு கதாபாத்திரம்.

மகனின்
நட்பு வட்டாரத்தில்
நாகரிக மாறுதல்
தெரியாத பழையவாதி.

சுயமரியாதை
பாழ்படுத்தும் 
உணர்ச்சி தேமல்கள் எதையும்
வெளிபடுத்தி கொள்வதில்லை
அப்பாக்கள். .

இருப்பினும்
குடும்ப வெளிச்சற்க்காக
சகலத்தையுமா தாரைவார்ப்பது?
என்ற முதியோர் இல்ல
அறைத்தோழனின் கேள்விக்கு
கண்களை கழுவித்தான்
உணர்ச்சிகளை வெளிகாட்ட முடிகிறது.

அப்பாக்கள்
பரிதாபத்திற்க்குரியவரா?..

###################

அப்பா கவிதை. ..3

அப்பா கவிதை. ..3

"""""""""""""""""""""""""""""""

மேலதிகாரி வீட்டிலிருந்து கட்டிக்கொண்டு வந்து
தன் மீது இறக்கி வைத்த கோபம்.

தவணை தவறிய கடனுக்காக வங்கி அதிகாரி தொலைபேசியில் அள்ளிக்கொடுத்த
சொல்லகூசும் வார்த்தைகள்.

எந்த சலனமுமின்றி
அலுவலகம் விட்டு திரும்புகையில் பள்ளி விட்டு திரும்பும் குழந்தைக்கு சாக்லேட்டும் கேக்கும் வாங்கி வருவார்
அவர்தான் அப்பா. .

,,,,,,,, ,, ,,,,,,;,;;;;;;,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

அப்பா கவிதை. .10

அப்பா கவிதை 10

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

அசுர சக்தி......
அப்பா.

பணத்தின் அருமை தெரியவேண்டுமா...
கடன்வாங்கி செலவழித்து பார்.

உதவி கிடைக்காமல்
அவதிபட்டு அல்லறுவதை அனுபவித்து பார்.
நண்பனின் மதிப்பு புரியும்.

சரியான நேரத்திற்கு
வருவதை தவிர்க்கும்
காதலிக்காக காத்திருக்கும் காலத்தை கணக்கீடு செய்துபார். நேரத்தின் அருமை தெரியும்

அப்பாவின் அருமை தெரிய வேண்டுமா..
சிறைச்சாலையில் விசாரித்துபார். அப்பாவின் அனுபவங்களை கைபிடித்து நடக்காததாலும் அப்பாவின் எச்சரிக்கை அறிவிப்புகளை அலட்சிய படுத்தியதாலும் பாழ்பட்டவர்களே அதிகம் என கதை பல சொல்லும்.

அப்பா.....
அசுர சக்தி.

××÷××××÷÷×÷×××××××÷××××÷÷÷÷

அப்பா கவிதை. ..14

அப்பா கவிதை. .14

''''''""""""""""""""""""""" போற்றுவதற்குரியவர் அப்பா. .. தூற்றுவதற்குரியவர் அல்ல..

விரல் பிடித்து நடந்த
குழந்தை பருவம்.

கைபிடித்து ஓடிய
சிறுவன் பருவம்.

ஆச்சரியமுட்டிய அரிதான அவதாரமாக தெரிந்தார் அப்பா. .

இருபதுகளின் ஆரம்பம்முதல் இறுதிவரை,
சந்தோச கதவின் பூட்டுகள், வளர்ச்சியின் வேகதடைகள் ,
என்றே அப்பாக்களை
தவறாக அடையாளப்படுத்தி உள்செலுத்தி வைத்திருக்கிறது சமுக கவர்ச்சிகளும் திரைபடங்களும்.

சில பிள்ளைகள்
முப்பதின் ஆரம்பத்திலும்
சிலர் அறுபதுகளின் முடிவுகளிலும்தான்
அப்பாவின் அருமையை
அறிந்து கொள்கிறார்கள்.

அப்பாவின் மீதான
ஐப்பிராயங்கள்
அடிக்கடி உருமாறிக்கொள்கின்றன பிள்ளைகளின் மனதில்.

தம் பிள்ளைகள்
ஒழக்க வளர்ச்சியிலும்
அறிவு முதிர்ச்சியிலும் திறன்படவேண்டும் என்பதில் மறுமதிப்பீடு செய்துகொள்வதில்லை.
எந்த வயதிலும்,
எந்த அப்பாவும்.

போற்றுவதற்குரியவர் மட்டுமல்ல வணங்குவதற்கரியவரும் அப்பாதான்.

'"'"'"'"'"'""""":''"'"'"'"'""'":'":''

அப்பா கவிதை. ..15

அப்பாவின் கவிதை. ..15

₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹

ஒழுங்கீடற்ற நேரத்தில் நண்பர்களுடணான மகனின் ஊர்சுற்றலை கண்டிப்பார் அப்பா .

இளைஞர் என்றால் அப்படித்தான் பாச முலாம் பூசுவார் அம்மா.

நடுநிசி வரையிலான இணைய உலாவினை தடைசெய்வார் அப்பா.

வேறென்ன பொழுதுபோக்கி இருக்கிறது என அன்பு போர்வை போர்த்துவார் அம்மா.

பெரும்பாலான அப்பாக்கள், அப்பாவின் அருமையை
மகனுக்கு உணர வைக்கும் ஒவ்வொரு முறையும்,
அன்புகாட்டி மறைத்து விடுகிறார்கள்
சில அம்மாக்கள்.

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

அப்பா கவிதை. ..23

அப்பா கவிதை ..23 =================
அதிக தேடலுக்குப்பின்னும் அரிதாகவே தென்படுகிறார்கள் கடனில்லா அப்பாக்கள். .

தம்மைவிட
தன் குழந்தைக்கு உயர்கல்வி. செயல்படுத்த முனைகையில் முளைக்கிறது கடன் செடி....

எவ்வளவோ முயற்சித்தும் வாங்கவே முடியாமல்போன.... அருகிருந்தும் கிடைக்காமல் தவறிய...

பொருள்களை வாங்கிகொடுத்து குழந்தைகளை மகிழ்ச்சியாக்கி தானும் மகிழ்கையில்
வளர்ந்து மரமாகிறது கடன்...

கையூட்டு சம்பிரதாயங்கள் முடித்து பிள்ளைகளுக்கு வேலை, சடங்குகள் பார்த்தது பிள்ளைகளுக்கு திருமணம்..

திரும்பி பார்க்கையில் கிளைவிட்டு பரந்துகிடக்கிறது பெருத்த கடன்மரம்...

ஆங்காங்கே தேடியும் அரிதாகத்தான் தென்படுகிறார்கள் கடனில்லா அப்பாக்கள். .

பெரும்பாலான அப்பாக்கள்
தன் வாழ்நாள் முழுதும்
கிளைகளை மட்டுமே
குறைத்து கொண்டிருக்கிறார்கள்.

மரத்தை முழுவதுமாய் அகற்றிவிட முடிவதில்லை. ■●■■●■●■●■●■●■●■●■●■

அப்பா கவிதை. .27

அப்பா கவிதை ..27 ■■■■■■■■■■■■■■■■■ நேரிடையாகவும்
சூசகமாகவும்
கண்டித்தும் தண்டித்தும்
மகனின் பலவீனத்தை
பலம் ஆக்க
பலமாக முயற்சி செய்து
வெற்றியும் பெறுகிறார்கள் பெரும்பாண்மையான அப்பாக்கள்.

மகனின் பலவீனங்கள்
அவனின் அம்மாவுக்கு கூட
தெரிந்து விடாமல் பராமரித்து கொள்கிறார்கள்.

பலவீனமாகிவிடுவாள் என்பதற்காக அல்ல.
மகனின் பலவீனங்கள்
மிகவும் ரகசியமாக பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்காக.
அவர்தான் அப்பா. .

அப்பா கவிதை. .26

அப்பா கவிதை. .26

"""""""""""""""""""""""""
சபைதனில்
தன்திறமை வியந்து
பலர் பாராட்டுகையில்,
நன்றி எனும் மூன்றெழுத்து
ஒற்றை சொல்லை உச்சரிக்க
நாக்கு தழதழக்கும் உணர்ச்சி தருணங்களிலும்
கண்களில் தவழும் நீர் துளியை சேதாரமின்றி பெருவிரல் துடைத்தெடுக்கும் தருணங்களிலும்

இவற்றிற்கு ஆதாரமான கோட்டுருவம்
நம்கண் தோன்றும்
அவர்தான் அப்பா. """"""""""""""""""""""""""""""""""""""""""""

அப்பா கவிதை. .25

அப்பா கவிதை....25 ~~~~~~~~~~~~~~~~~~~~ தொழிலதிபரான அப்பா
பல தொழில்களுக்கு அதிபராக்குகிறார்
தன் மகனை.

மருத்துவமே படிக்காத மகனுக்கு பல்துறை மருத்துவமணை கட்டிகொடுத்து அமர வைக்கிறார் மருத்துவரான அப்பா. .

அதிக மழையிலும் அதிக வெயிலிலும் பழாய்போகிறது. தள்ளுவண்டியில் காய்கறி விற்பவரின் வியாபாரமும் வருமானமும்.

மகனுக்காவது நிச்சய வருமானம் கிடைக்க உயர்கல்வி படிக்க வைக்கிறார். .

ஆயுள்முழுக்க கடனோடு போராடும் உலகுக்கு உணவளிக்கும் விவசாயி.
மகனாவது வெள்ளை உடுப்பு வேலைபெற வெயிலில் உழைக்கிறார் ..

வசதி'பெற்ற' அப்பாக்களின் வசதி'யற்ற' அப்பாக்களின் ஆசைகள் அனைத்தும்
மகன்கள் வசதியாய் வாழவேண்டுமென்ற
ஒற்றை புள்ளியிலே
மொத்தமாய் குவிகின்றன.

தன்காலடியை இருளாக்கிக்கொண்டு குடும்பத்திற்கு வெளிச்சம் கொடுக்கும் மெழுகுவர்த்திகள் அப்பாக்கள். . ######################

அப்பா கவிதை. ..24

அப்பா கவிதை. ..24
*****************

மிதிவண்டியின் முன்புறம் அப்பாவின் கைகளுக்குள் பாதுகாப்பாய் பயணிக்கையில்,

கூந்தலை கலைக்காமல்
முகத்தில் மட்டும் உறவாடும் மெலிதான காற்று.

ஒருவர்கூட சாலையை கடக்காதபோதும்
மிதிவண்டியின் மணியை அடித்து பார்க்கும் சந்தோசம்.

பிறந்தநாளன்று
குடும்பத்தோடு கோவிலில் சின்னதாய் ஒருபூஜை

ஒழுங்கற்று நொறுக்கிய
தேங்காய் துண்டு
ஒழுங்காய் நறுக்கிய
வாழைப்பழம் பிரசாதமாய்.

பழையதுதான் ஆனாலும் ,
அடிக்கடி புதுப்பிக்கப்பட்டு எப்போதும் புதியதாய் புத்தகப்பையும்
பள்ளி சீருடையும்.

பொருளாதார பற்றாக்குறையிலும் வசதியாய் வாழும் திறமை படைத்தவர்...
திறன் வளர்த்தவர்...
அப்பா. .. ÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

அப்பா கவிதை. ..22

அப்பா கவிதை. ...22
::::::::;:;:;::::;;::::::::::::::::::::::::

இனிமையானவர் அப்பா. இறுக்கமானவராக காட்டிகொள்வார்.!

முடிதிருத்துதல் மட்டுமல்ல
புதிய உடைகளிலும் நாகரீக தரவுகளை எதிர்ப்பவர் அப்பா.
மகன் அழகுற
அடிப்படை தகுதி.!!

காலணிகளுக்கு அதிக செலவிடுதலையும்
உணவு விடுதியில் குறைவாக செலவிடுதலையும்
எதிர்ப்பவர் அப்பா. .
சிக்கனவாதியாக்க முதல்படி.!!!

இரவில் தாமதமாக உறங்குதலையும்
காலையில் தாமதமாக
எழுவதையும் எதிர்ப்பவர் அப்பா. . பொறுப்புள்ளவானக்க பயிற்சி. .!!!

இறுக்கமானவராக காட்டிக்கொள்ளும் இனிமையானவர் அப்பா. ,
;,;,;,;,,;,;,;,;,;,;,;,;,;,;,;,;,;,;,;,;,;,;,;,;,;,;,;,;,;,;,;

அப்பா கவிதை. ..21

அப்பா கவிதை. ...21 ○•○○•○○○•○○○○•○○○○•

அற்புத சுகங்கள் அப்பாவுடன் நடந்த மழைநாட்கள்..

ஆரம்பபள்ளியில்
பள்ளி முடியும் நேரத்தில் ஆரம்பிக்கும் மழை..

குழந்தைகளை கூட்டிச்செல்ல கைகளில் குடைகளோடு சில அம்மாக்கள். .
பல அப்பாக்கள். .

கையில் குடைபிடித்தபடி அப்பா. அப்பா கைபிடித்தபடி நான். ஆங்காங்கே நனைந்தபடி அப்பா நனையாமல் முழுமையாய் நான்.

மழைநாளில் அப்பாவுடன் வீதிகளில் நடக்கையில்
ஓடிவந்து ஒட்டிக்கொள்ளும் கம்பீரம்.

அப்பாவுக்கு கிடைக்கும் மரியாதைகள் தனக்கே கிடைத்ததான கர்வம் .

அன்றுமட்டும்
சற்று கூடுதலாய் கிடைக்கும் இரண்டு மிட்டாய்களும்
சூடான அதிரசமும்.

மழையில் நனைந்து வீடு திரும்புகையில்
தன் முந்தானையால்
அம்மா தலை ஈரம் எடுக்கையில் பெருந்திரளாக கிடைக்கும்
இன்ப நேரங்களை விட,

மழைநாளில் அப்பாவுடன் நடக்கையில் கிடைக்கும் ஆனந்தம் அற்புத சுகங்கள். ...

%%%%%%%%%%%%%%%%%%

அப்பா கவிதை. ..18

அப்பா கவிதை ...18 `~`~`~`~`~`~`~`~`~`~`
தான் கடந்து வந்த
வயதுகளில்
அப்பாவிடம்
கேட்டிருக்கவேண்டிய பல கேள்விகளை
கேட்காமலேயே தவற விட்டிருக்கிறோம்!

ஆரம்பக்கல்வி வகுப்பறையில்
அமர வைத்த அப்பா. ...

மகிழ்ச்சி தருணங்களை
உருவாக்கி கொடுத்த அப்பா. ..

பசி தெரியாமல் புசிக்க வைத்த அப்பா. ..

சந்தோசத்தை மட்டுமே கண்விழியில் காட்டிய அப்பா. ..

எதிர்மறை பலன்கள்...
நேர்மறை விளைவுகள். .. அனுபவங்களை கட்டி கொடுத்த அப்பா. ..

நடந்த பாதையில்
அப்பாவிடம் கேட்டிருக்கவேண்டிய எண்ணற்ற கேள்விகளை எண்ணாமலேயே இருந்திருக்கிறோம்.!!

அப்பா ,
அறுபது வயதை கடந்த பின்னாலாவது,
ஒற்றை கேள்வியை ஒவ்வொரு நாளும் கேட்டு வையுங்கள்.
"அப்பா சாப்பிட்டீர்களா?" என்று.

=_=_=_=_=_=_=_=_=_=_=_=__=_=_

அப்பா கவிதை. ..17

அப்பா கவிதை. ..17
^×^×^×^×^×^×^×^×^
தன் முதுகின்மீது
சவாரி செய்பவர்களின் சந்தோசத்திற்காக
வருத்தத்தை வெளிகாட்டாமல்
ஓடும் குதிரைகள்....
அப்பாக்கள்.

தான் வாழும் வீட்டில்
பெரிதாய் வெகுமதி
எதுவும் கிடைத்துவிடாது என்றபோதிலும்
உழவனுக்காக உழைக்கும் மாடுகள்....
அப்பாக்கள்.

"எனக்கென, என்னசெய்தார் அப்பா?"
என்ற மகனின்
ஒற்றை கேள்வியில்
நொறுங்கி பொசுங்கிபோய்விடுகிறது அப்பாவின் தியாகமும் அர்ப்பணிப்பும்.

÷×÷×÷×÷×÷×÷×÷×÷×÷×÷×÷×÷×÷×÷÷

அப்பா கவிதை. ..16

அப்பா கவிதை. 16 

++++++++++++++++ 

 அப்பாவை 
போன்றதுதான் 
 நெடிய ஆலமரமும்.. 

தன்னை 
 தேடிவருகிறவர்களுக்கு புகலிடமும் நாடிவருபவர்களுக்கு அடைக்கலமும் கொடுக்கும் அப்பாவை போலத்தான்
 கிளையில் பறவைகளுக்கும் அடியில் மனிதர்களுக்கும்
 ஆதரவு கொடுக்கும் 
ஆலமரம். 

 உறவு சுற்றத்துக்குள்ளும்
 பழகிய சமுகத்திற்க்கு 
வெளியிலும் 
 வெளிப்படையானவர் அப்பா.

 உயிர் வாழ ஆதாரமான வேர்களைகூட 
வெளிகாட்டியபடி பெருத்த ஆலமரம். 

 இருப்பினும் தன் காலடியில் புற்களைகூட வளரவிடுவதில்லை ஆலமரம். 

தன்னை நம்பியவர்களுக்கு வாழ்க்கையும் 
வாழத்தகுதியும் வகுத்துகொடுப்பவர் அப்பா.

 நீண்டகாலம் வாழ்ந்து நெடிந்து வளரும் ஆலமரத்தைவிட உயர்ந்தவர்கள் அப்பாக்கள்.

 >>>>>>>><<<<<<<<<<<<<>><

அப்பா கவிதை. ...15

அப்பாவின் கவிதை. ..15 ₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹ ஒழுங்கீடற்ற நேரத்தில் நண்பர்களுடணான மகனின் ஊர்சுற்றலை கண்டிப்பார் அப்பா . இளைஞர் என்றால் அப்படித்தான் பாச முலாம் பூசுவார் அம்மா. நடுநிசி வரையிலான இணைய உலாவினை தடைசெய்வார் அப்பா. வேறென்ன பொழுதுபோக்கி இருக்கிறது என அன்பு போர்வை போர்த்துவார் அம்மா. பெரும்பாலான அப்பாக்கள், அப்பாவின் அருமையை மகனுக்கு உணர வைக்கும் ஒவ்வொரு முறையும் அன்புகாட்டி மறைத்து விடுகிறார்கள் சில அம்மாக்கள். ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

அப்பா கவிதை. ..14

அப்பா கவிதை. .14 ''''''""""""""""""""""""""" போற்றுவதற்குரியவர் அப்பா. .. தூற்றுவதற்குரியவர் அல்ல.. விரல் பிடித்து நடந்த குழந்தை பருவம். கைபிடித்து ஓடிய சிறுவன் பருவம். ஆச்சரியமுட்டிய அரிதான அவதாரமாக தெரிந்தார் அப்பா. . இருபதுகளின் ஆரம்பம்முதல் இறுதிவரை, சந்தோச கதவின் பூட்டுகள் வளர்ச்சியின் வேகதடைகள் என்றே அப்பாக்களை தவறாக அடடையாளப்படுத்தி உள்செலுத்தி வைத்திருக்கிறது சமுக கவர்ச்சிகளும் திரைபடங்களும். சில பிள்ளைகள் முப்பதின் ஆரம்பத்திலும் சிலர் அறுபதுகளின் முடிவுகளிலும்தான் அப்பாவின் அருமையை அறிந்து கொள்கிறார்கள். அப்பாவின் மீதான ஐப்பிராயங்கள் அடிக்கடி உருமாறிக்கொள்கின்றன பிள்ளைகளின் மனதில். தம் பிள்ளைகள் ஒழக்க வளர்ச்சியிலும் அறிவு முதிர்ச்சியிலும் திறன்படவேண்டும் என்பதில் மறுமதிப்பீடு செய்துகொள்வதில்லை. எந்த வயதிலும், எந்த அப்பாவும். போற்றுவதற்குரியவர் மட்டுமல்ல வணங்குவதற்கரியவரும் அப்பாதான்.

அப்பா கவிதை. .13


அப்பா கவிதை. .13

""""""""""""""""""""""""
அப்பாக்களில்
கெட்ட அப்பாக்கள் என்று தனிப்பிரிவு எதுவுமில்லை.

கண்ணுக்கு காவலன் என இமைகள் விளம்பரபலகை வைத்துக்கொள்ளுவதில்லை

குடும்ப அபிவிருத்திக்காக மீளாக்கடனில் சிக்குண்டபோதும் முகத்தில் சந்தோசத்தை நிரப்பி வைத்துக்கொள்கிறார் அப்பா .

குடும்பத்திற்கு உள்ளும் குடும்பத்திற்கு வெளியேயும். குடிகார அப்பா கூட
தம் மகன்
குடிகாரன் ஆவதை விரும்புவதில்லை..

அப்பாக்களில்
கெட்ட அப்பா என்ற தனிப்பிரிவு தேவையே இல்லை.

:":":":::":::"::;::::"":";":::";";":";";:;:;";";:":

அப்பா கவிதை. ..12

அப்பா கவிதை .12

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

அலுவலகத்தில்
அப்பாவைக்காண
முன்அனுமதி பெற்று
பல பேர் காத்திருக்கையில்,
தன் காலில்பட்ட காயம் ஆற்ற மருத்துவமனையில் பரபரத்துக்கொண்டிருக்கிறார் அப்பா.

அழுத்தமாகவும்,
ஆழமாகவும்
வருத்த ரேகைகள் அப்பாவின் முகத்தில்.

சில தண்டிப்புகள்
பல கண்டிப்புகள்
நம்மீதான வெளிப்பாட்டின்போது அப்பா மீது கொண்டுள்ள எதிர்மறை எண்ணங்கள். ..

இப்போது நினைக்கையில்
காயம் கொடுத்த வலியைவிட அதிகமாய் வலிக்கிறது.

அற்புதமானவர்......
அப்பா. .
புரிந்துகொள்ளுங்கள்... அப்பாவை...

=============================

அப்பா கவிதை. ..11

அப்பா கவிதை 11

++++++×××++++++

அருமையானவர். ...
அப்பா.

வங்கி மேலாளர் தனது பணியறையில் உட்கார்ந்துகொண்டே ஓய்வின்றி கையொப்பம் இடுகின்றார்.

கடைத்தெருவில் காலணி தைப்பவரை
கடும்பகல் சூரியன் எவ்வித இடையூறும் செய்வதில்லை.

அமர்வதற்கு இடம்.
ஆசுவாச படுத்திக்கொள்ள நேரம். இருந்தும் நின்றுகொண்டுதான் இருக்கிறார் தேநீர் கடைக்காரர்.

புதுப்புது இடம்.
புதுப்புது சூழல்.
எல்லோரும் சந்தோசமாய்
பொழுது கழிக்கையில்
சுற்றுலா பேருந்தில் ஓய்வெடுக்கிறார் ஓட்டுநர்.

எல்லா அப்பாக்களுக்கும் குடும்பம்தான் எல்லாம்.
அப்பா..... அருமையானவர்.

அப்பா கவிதை. ..9

அப்பா கவிதை. ..9
~~~~~~~~~~~~~~~~~~~

பிள்ளைகள்
தவறு செய்ய நேருகையில்
பொய் கோபம்காட்டி சமாதனப்படுத்தி
தூங்க வைப்பாள் அம்மா.

நிஜ கோபம்காட்டி
தண்டித்து
தூங்காமல் தவிப்பார் அப்பா.

அவரே அப்பா .

__________________________________

அப்பா கவிதை...8

அப்பா கவிதை ...8

●●●●●●●●●●●●●●

கோபம் இல்லாமலில்லை. இருப்பினும்
அடக்கியாள வேண்டிய சூழல்.

தன்மானம் இல்லாமலில்லை. இருப்பினும்
கூனிகுறுக வேண்டிய நிர்ப்பந்தம்.

கவலை இல்லாமலில்லை. இருப்பினும்
சிரித்தாக வேண்டிய நெருக்கடி.

மனச்சாட்சியை திறந்துவைத்த தருணங்களிலும்
திரைபோட்டு வைத்த தருணங்களிலும்
சங்கடங்களே எஞ்சங்களாய்
எஞ்சி நிற்க்கின்றன.

அன்றன்றைய நாட்களை சங்கடத்துடனும்
சகஜத்துடனும் கழிக்கிறார்கள் பெரும்பாண்மையான அப்பாக்கள்.

சங்கடங்கள்,
சகஜங்கள்
தன் பிள்ளைகள் அடைந்து விடகூடாது என்பதற்காக.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

அப்பா கவிதை. ..7

அப்பா கவிதை ..7

÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

அலுவலகம் முடிந்தோ நண்பர்களொடு பொழுது கழித்தோ இரவு தாமதமாக வீடு திரும்புகையில்
சாப்பாடு பரிமாற தவறவிடும் அம்மாக்கள் உண்டு.

காலையில், அம்மாவிடம்
"இரவு சாப்பிட்ட பின்புதானே உறங்கினான்"
என்ற கேள்வியை கேட்க தவறவிடும் அப்பாக்கள் அரிது .

%%%%%%%%%%%%%%%%

அப்பா கவிதை. ..6

அப்பா கவிதை. ..6

~~~~~~~~~~~~~~~~~~
நடக்கையில்
குழந்தைக்கு கால்கள் வலிக்குமென இடுப்பில் சுமந்து செல்வாள் அம்மா.

விரல் பிடித்து
நடைபயிற்சியோடு சுய பயிற்சியும் கற்றுதருவார் அப்பா. .

விளையாடாதே விழுந்து விடுவாய் !!
பயமேற்றுவாள் அம்மா. .

வீழ்வது சகஜம்.
எழு என சைக்கிள் ஓட்ட கற்றுகொடுப்பதோடு தன்னம்பிக்கை உரமேற்றுவார் அப்பா. ..

சின்ன பையன் என்ன தெரியும் ஒடுக்குவாள் அம்மா.

முடியும் உன்னால் பொறுப்போடு வெற்றி கொடுப்பார் அப்பா.

தந்தை சொல் மிகவும் மந்திரமிக்கது எப்போதும். .

====================

அப்பா கவிதை. ..5

அப்பா கவிதை. ...5

"""""""""""""""""""""""""""""

சேமிப்பு
வாழ்வு கொடுக்கும்.

நெருக்கடி
வாழ்க்கை கொடுக்கும்.

படிப்பு
வாழ தகுதியுள்ளவனாக்கும்.

வாழ்வு,
வாழ்க்கை,
வாழ தகுதி
படிப்படியாக ஊட்டுபவர் அப்பா. ..

தான் அப்பா ஆனபிறகுதான் அப்பாவின் அருமையை அறிந்து கொள்கிறார்கள் பல மகன்கள். ..

=============================

அப்பா கவிதை. .4

அப்பா கவிதை ...4

"""""""""""""""""""""""

தன் மகன்
தன்னைவிட உயர்பதவி அடையவேண்டும் என்பதற்காகவே அதிகமாய் உழைக்கிறார்கள்

மேலதிகாரி முதல்
கடைநிலை ஊழியர் உட்பட
எல்லா அப்பாக்களும்.

மகன்கள் தான்
அப்பாக்களை வித்தியாசப்படுத்தி பார்க்கிறார்கள்.

*****************************

அப்பா கவிதை. ..2

அப்பா கவிதை. .2

"""" """""""" """"""""""""""""

உயர்வகை சிபாரிசுடன்
15 நாள் விடுமுறை எடுத்து குழந்தை அட்மிஷனுக்கு அலைந்து அலுத்தபோதுதான் தெரிந்தது,

பத்தாம்வகுப்பு மதிப்பெண் பட்டியல் கையில் வாங்கியவுடன் பதிணொண்றாம் வகுப்பில் அட்மிஷன் வாங்கி கொடுத்த அப்பாவின்
அருமையும் உழைப்பும்.
=============================

அப்பா கவிதை ...1

அப்பா

""""""""""

ஒவ்வொரு மகனின் வெற்றிக்குள்ளும் அப்பாவின் அனுபவம் ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது.
=============================

திங்கள், 20 மார்ச், 2017

"கண்ணதாசன் " பற்றிய கவிதை

அகிம்சையும் வாய்மையும்
 அறிந்து கொள்ள வேண்டுமா?
 காந்தியை படியுங்கள். 
சில மாதங்கள் போதும்!

 அமைதியும் ஆன்மிகமும்
 அறிந்து கொள்ள வேண்டுமா? விவேகானந்தரை படியுங்கள்.
 சில ஆண்டுகள் போதும்!

 கலாச்சாரமும் நாகரீகமும்
 அறிந்து கொள்ள வேண்டுமா?
 கண்ணதாசன் கட்டுரை படியுங்கள். 

இலக்கியமும் வாழ்வியலும்
 அறிந்து கொள்ள வேண்டுமா?
 கண்ணதாசன் நாவலை படியுங்கள்.

 தாலாட்டு முதல் ஒப்பாாி வரை
 உணா்வுகளை உணா்ந்து கொள்ள கண்ணதாசன் பாடல்களை நுகருங்கள்.

 இதற்காக அதிக பட்சம் ஓா் ஆயுளை பயன்படுத்த வேண்டியதிருக்கும்.
 அவரே கண்ணதாசன்.

 எல்லாம் இருக்கும்
 எல்லாம் கலந்த
 கலவை பொக்கிஷம் கண்ணதாசன்.

 சுக துக்கங்கள் நிரம்பி வழிபவையே
 நல் வாழ்க்கை. 
ஒவ்வொரு காலகட்டத்திலும்
 ஒவ்வொரு வகை உணா்வுகள்.
 நம்முடன் உடன் பயணிப்பவை.

 ”அத்தைமடி மெத்தையடி” யில்
 தாலாட்டு. 

”சோதனை மேல் சோதனை” யில் 
சோகம்.

 ”உள்ளம் என்பது ஆமை” யில்
 தத்துவம். 

”எங்களுக்கும் வாழ்வு வரும்”-ல் 
சந்தோசம்.

 ”ஆறு மனமே ஆறு” வில்
 நிம்மதி. 

”யாரை நம்பி நான் பிறந்தேனி”ல் 
ஆற்றாமை.

 ”வானில் முழு மதி”யில்
 அழகு.

 ”அத்திக்காய் காய் காய்“ யில் 
சிலேடை. 

”ஆட்டுக்குட்டி முட்டையி்ட்டு”வில் 
நகைச்சுவை. 

”சொன்னாலும் வெட்கமடா”வில் 
சஞ்சலம்.

 ”எட்டடுக்கு மாளிகை”யில் 
ஒப்பாாி. 

”பூஜ்யத்துக்குள்ளே ஒரு ராஜ்யத்தில்”
 ஆன்மிக தேடல்.

 சற்று அதிகப்படியாக காதலில்
 ”கண்ணெதிரே தோன்றினானில்”
 காதலில் மகிழ்ச்சி. 

”கடவுள் மனிதராக“வில் 
காதலில் கோபம்.

 ”நிலவை பாா்த்து வானம் சொன்னதில்” காதலில் ஏக்கம். 

“அவளா சொன்னாளில்” 
காதலில் நம்பிக்கை.

 எல்லாம் உண்டு. 
இல்லை என்பதில்லை.
 எல்லாம் உண்டு கண்ணதாசனில்.

 எல்லாம் கலந்த கலவை பொக்கிஷம் கண்ணதாசன்.

 ”வெயில்காலம் வந்துவிட்டது என்பதற்காக கொக்கு கவலைபடக்கூடாது.
 அதோ மழைக்காலம் வருகிறது!”

 ”மழைக்காலம் வந்துவிட்டது என்பதற்காக நதிகள் ஆா்பாிக்ககூடாது.
 அதோ வெயில் காலம் வருகிறது”.

 கண்ணதாசனின் சிந்தனை வாிகள். நிலையற்றது வாழ்க்கை.

 உச்சகட்ட மகிழச்சியின்போது 
ஆா்ப்பாிப்பதும்
 அதிக பட்ச தோல்வியின்போது
வீழ்ந்து போவதும் அா்த்தமற்றவை.

 சிலவாிகளில்
வாழ்க்கை நிலையாண்மையை
 நிலையாய் சொன்னவா் கண்ணதாசன்.

 எளிய வடிவம் பெற்ற
 சித்தா் பாடல்கள்.
 புதிய ரசனைமிக்க கருத்தை பிரசவிக்கும் திருக்குறள்கள்.
 காதலுக்கு அழகூட்டும் 
புறநானுாற்று பாடல்கள்.
 கண்ணதாசன் எளிய தமிழா்களுக்கு அள்ளிகொடுத்த இலக்கியங்கள்.

 கீதையில் கண்ணன் சொன்னதைவிட கண்ணதாசன் சொன்னதுதான்
 அதிகம் பேருக்கு
அா்த்தம் புாிந்தது.

 அதிகம் அா்த்தமுள்ள இந்துமதம் கண்ணதாசனால்
 மேலும் அதிகம் அா்த்தமுள்ளதாக பளபளக்கிறது.

 திரும்பி பாா்க்கையில் 
அதிசயித்து நடக்கையில் எ
ங்கும் கண்ணதாசன் 
எதிலும் கண்ணதாசன்

 எப்போதும் கண்ணதாசன்.
 எல்லாம் கண்ணதாசனால் கண்ணதாசனால்தான் எல்லாம்.

திங்கள், 13 மார்ச், 2017

காரணம்

இன்று
எனக்கு
ஜலதோசம்.
நேற்று
நீ
மழையில் நனைந்தாயோ?