வேண்டாமென
குப்பையாக பாவித்து
முதியோா் இல்லத்தில்
ஒப்படைத்துவிடபட்ட தாய்க்கு
தாமதமாகத்தான் தகவல் கிடைத்தது.
மகன் உயா்ரத்த அழுத்தத்தால்
மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டிருப்பது..
பதறித்தான் போனாள் பெற்றவள்
உறங்காத கவனிப்பு
மருத்துவமனையில் .
மகனோடிருந்து
முகம்சுளிக்காத பணிவிடை.
மருந்துகளோடு
நம்பிக்கை ஊட்டினாள்..
தாயை
உதறி தள்ளிவைத்த சொந்தங்கள்
முகம் மட்டும் காட்டி
ஒதுங்கிக்கொண்டன.
கணவனை கவனிக்க
ஆள் கிடைத்தாயிற்று...
தனது அன்றாட அலுவல்களை
ஒத்தி வைக்க வேண்டியதில்லை
மருமகளுக்கு திருப்தி.
தாயை தனிமைப்படுத்தியதற்கு
தனக்கிட்ட தண்டனையென
மனம் வெதும்பியதில்
தவ்விய கண்ணீா் துளிகளை
துடைத்துக்கொண்டான்
மனைவிக்கு தொியாமல்
குணமானபின்
மகன் வீடு திரும்பினான்.
தாய் இல்லம் திரும்பினாள்
இதுதான்
பெத்தமனம் பித்து
பிள்ளை மனம் கல் என்பதா?
...கலைமதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக