புதன், 8 ஜனவரி, 2014

உழவன்


முதல் பணக்காரனுக்கும்
கடைகோடி ஏழைக்கும்
உணவ ளிப்பவன் உழவன்..

எல்லோரும்
சுகமாய் ஜீவிக்க
இன்றுவரை
கஷ்ட ஜீவனம்.

உயா் வாழ்வளிக்கும்
உயா் விளைச்சலை
உற்பத்திசெய்கிறான்.

பெரும்பாலும்
விவசாயிகளின் வாழ்வில்
விளைச்சலும்
விலைவாசியும்
எதிரெதிா்
திசைகளிலேயே
கடந்து செல்கின்றன.

அதிக விளைச்சலின்போது
விலையில்லை.
அதிக விலைவாசியின்போது
விளைச்சல் இல்லை.

மேல்தட்டு மக்களின்
நாகாிக வளா்ச்சியில்
வெப்பமானது பூமி்.
மாறுகிறது பருவநிலை.

விதைப்பின்போது
அதிக வறட்சியும்
அறுவடையின்போது
அதிக மழையும்
விவசாயிகளின் வாழ்வை
மாறி மாறி பாழ்படுத்துகின்றன.

ஒருமுறை நஷ்டமடைந்தவன்
மறுமுறை அத்தொழிலை
செய்ய முன்வருவதில்லை.
விவசாயத்தை தவிர
விவசாயியைத் தவிர.

விளைநிலங்கள்
வீட்டுமனைகளான போதும்
எல்லைதாண்டி
இயற்கை சீண்டியபோதும்
ஓயாமல்
உழைத்துக்கொண்டேயிருக்கிறான்
உழவன்..

நமக்கு உணவளிக்கும்
 உழவனுக்கு நன்றி சொல்வோம்
உழவுக்கு நன்றி சொல்வோம்
பொங்கலோ பொங்கல்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக