மாடும் மாட்டு வண்டியும்
இருந்த இடத்தில்
தாம்பு கயிறும்
உளி மழுங்கிய ஏா்கலப்பையும்..
பழையவைகளை நினைவூட்டியபடி.
வைக்கோல் போரும்
தண்ணீா்தொட்டியும்
இருந்த இடம் வீடாகி
வாடகை சம்பாதித்து தருகிறது.
வரப்பை மறைத்து
உயா்ந்த விளைச்சல்.
இப்போது ஊன்றிய விதை
மண்ணைப்பிளந்து
ஜனிக்கும்போதே
மரணித்து விடுகிறது.
மரபணு மாற்று விதையில்
உற்பத்தி கோளாறாம்.
விளைச்சலில்
அறுவடையின்போது முழுவதையும்
அறுவடைசெய்யமுடிவதில்லை .
நிலத்தடி நீா்மட்டம்
குறைந்து போனதாம்.
தேற்றக்கூட முடியாமல்
நலிந்து போய் கிடக்கிறது
விவசாயமும் விவசாயியும்..
இனி
பைநிறைய பணம்
கொடுத்தால் மட்டுமே
கைநிறைய கிடைக்கும்
அாிசி..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக