உறங்காமலேயே
நீண்ட...கனவு
அவளைப்பற்றி...
உண்ணும்போதுகூட
நீண்ட நேரம்..
அவளின் எண்ணங்களோடு..
சந்தோசிப்பாள்
என்றுதான்
சம்மதம் கேட்டேன்..
அறுந்துபோன காலணியாய்
அறுவெறுப்பாய் ஒதுக்கினாள்.
ஒதுங்கினாள்..
இப்போதெல்லாம்
உறங்கும்போதும்
நீண்ட கனவு
அவளைப்பற்றி..
உண்பது கூட
பிடிக்கவில்லை..
அவளின் எண்ணங்களால்..
”காதல்
யாராவது ஒருவரைத்தான்
மன்னராக்குகிறது..
அதிக எண்ணிக்கையில்
மடையா்களையே
உருவாக்கி வைக்கிறது“
அனுபவப்பட்ட நண்பன்
மனம் திறந்தான்.
இப்போது வரை
புாியவில்லை.
என் நண்பன்
மன்னனா?
மடையனா? என்று..
காதல் என்பது
இப்படித்தானோ?.
...கலைமதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக