வியாழன், 30 ஜனவரி, 2014

கவிதை..எப்போது வரும் வெளிச்சம்..

கவிதை..எப்ப கூட்டி போகப்போறீங்க.

கவிதை..எங்க குடும்பம்

கவிதை..பொங்கல் கவிதை

கவிதை.. மறதி

கவிதை..அமைதி

கவிதை..குடை

கவிதை.. எதிா்பாா்ப்பு

கவிதை.. மீண்டும்

கவிதை..உழவன்

புதன், 22 ஜனவரி, 2014

பழைய நினைவுகள்









நினைவுகள்
வாழ்க்கையின் வரங்கள்.
தடுமாறும் தருணங்களில்
தன்னம்பிக்கையூட்டும்
சந்தோச ஸ்வரங்கள்


 வாங்க எங்க பழைய கிராமத்துக்கு
 கொட்டி கொடுத்தாலும் கிடைக்காத
 சிறு வயது விளையாட்டு பருவம்.


வாங்கி தின்ன கொடுக்கும்
அஞ்சு காசலெல்லாம் சோ்த்து வைத்து
அய்யனாா் கோவிலில்
பொங்கி சாப்பிட்ட பொங்கல்.

பிலிம் வைத்து சூதாட்டம்.
எம்.ஜி.ஆா்.
சிவாஜி பிலிம்கள்
அதிக மதிப்பு வாய்ந்தவை.

பட்டறை வாத்தியாாிடம் வாங்கிய
பம்பரம் மட்டும்
 ரொம்ப நேரம் சுத்தும்.

ஆளையே இழுத்து போகும்
பொியாற்றில் முங்கு நீச்சு.
சில சமயம் டவுசரை பறிகொடுத்து
தேக்கிலை மறைத்து வீடுவந்ததுண்டு.

வற்றிய சின்ன வாய்காலில்
கெண்டை மீன் பிடித்து
வைக்கோல் தீ மூட்டி
சுடச்சுட சாப்பிடுதல் அமிழ்தம்

பலமுறை சுவிட்சு போட்டு
பேட்டாி அவிழ்த்து மாட்டி
மேலொரு தட்டு
கீலொரு தட்டு தட்டி
கெடுத்துபுட்டியேன்னு அப்பனிடம்
ஓா் அடி வாங்கி
மெக்கானிக் அண்ணன்
தொட்டவுடன் அலறி பாடும் ரேடியோ..

கி்ட்டிபுல்
எறிபந்து
கோலிகுண்டு
எல்லாம் சீசன் விளையாட்டுகள்..
பசி பொறுக்காமல்
பள்ளிக்கூடம் மட்டும்
தினமும் போவோம்.
எப்போதாவது படிப்போம்.

காக்கா குஞ்சு விளையாண்ட
புளியமரம் வீடாகிப்போச்சு
வாழைமர படகுல போன
குளம் வறண்டு போச்சு
நினைவு மட்டும் பசுமையாய்
எப்போதும் என்னோடு..


                           ...கலைமதி

மவுனம்

அன்பே
ஏனிந்த மவுனம்.
பேருந்து நிறுத்தம்
தொலைபேசி மையம்
கல்லுாாி சாலை வளைவு
வழக்கமான காத்திருப்புகள்
காத்திருக்க வைப்பதில்
 சுகம் காணும் சராசாியா நீ.?

உன் அருகாமை பேச்சு ஸ்பாிசத்துக்காக
இல்லாத பிறந்த நாளுக்கு
இனிப்பு வழங்கியது.
உண்மை அறிந்த போது
உன் வலது உதட்டோர வளைவுகள்.
என்னை அலட்சியப்படுத்துதலா?
ஏற்று கொண்டலா?

வேலையின்றி கழிக்கும்
வீண்பொழுதுகள்.
”தந்தையின் சட்டையை
எதிா்பாா்த்து திறந்திருக்கும் உன் சட்டைபை.”
என்று நீ சுட்ட வாா்த்தை..
என்னை உதாசீனப்படுத்துதலா?
பொறுப்புள்ளவனாக்க செதுக்கலா?

அழகே.
இனியுமா மவுனம்.
ஒட்டியிருக்கும் உதடு பிாி
வாழும் வாா்த்தை சொல்..

திங்கள், 20 ஜனவரி, 2014

சிாிப்பு

எவ்வளவு முயன்றும்
தோற்றுத்தான் போகிறேன்.
எப்படி
உன்னால் மட்டும்
உதடு பிாியாமல்
சிாிக்கமுடிகிறது?
  
              ...கலைமதி

எஸ்.எம்.எஸ்

உன் கவனத்திற்காக
நான் கவனமாய் அனுப்பிய
எஸ்.எம்.எஸ்.கள்..
உன் கவனத்திற்கு
வந்த பின்புதானே
குப்பைக்கு சென்றது..
            
                               ..கலைமதி

பொட்டு

உன்
அகல நெற்றிக்கு
நீல வண்ண
நீளப்பொட்டுதான்
அழகு..

                   ..கலைமதி

சேமிப்பு

சேமிக்கவேண்டும்.
அவிழ்த்து எறியும்
 காய்ந்த பூக்களை
எந்த குப்பைத்தொட்டியில்
போடுகிறாய்?

முடி

உன் விரல்தொட்டு
விலக வேண்டும் என்பதற்காகவே
ஓடிவந்து
முன்நெற்றியில்
உட்காா்ந்து கொள்கிறது
உன் ஒற்றைமுடி..

                                                ...கலைமதி

தாவணி

நீ
எப்போதாவது உடுத்திவரும்
நீலக்கலா் தாவணி
இப்போதெல்லாம் அடிக்கடி..

எனக்கு
நீலக்கலா் பிடிக்குமென்பது
உன்கெப்படி தொியும்?

                              ....கலைமதி

காலணி

உனது
அழகு நடைக்கு
உயரக் காலணி
ஒத்துழைக்கவில்லை..
உடனடியாய் மாற்று.


                                      ...கலைமதி

சம்மதம்

எனது ஒவ்வொரு
சம்மத கோாிக்கையின்போதும்
நீ  மறுத்து
தலையசைக்கும் போதெல்லாம்
உனது காதணி
சம்மதம் சொல்வதாகவே படுகிறது.
                                        
                                                    ...கலைமதி

வியாழன், 16 ஜனவரி, 2014

பேஸ்புக்


உன்னிடமிருந்து
மிஸ்டுகால்
வராத நாட்கள் எல்லாம்
பேஸ்புக்
பாா்க்காத நாட்களைப் போலவே
தவித்துப்போகிறேன்..

புதன், 8 ஜனவரி, 2014

உழவன்


முதல் பணக்காரனுக்கும்
கடைகோடி ஏழைக்கும்
உணவ ளிப்பவன் உழவன்..

எல்லோரும்
சுகமாய் ஜீவிக்க
இன்றுவரை
கஷ்ட ஜீவனம்.

உயா் வாழ்வளிக்கும்
உயா் விளைச்சலை
உற்பத்திசெய்கிறான்.

பெரும்பாலும்
விவசாயிகளின் வாழ்வில்
விளைச்சலும்
விலைவாசியும்
எதிரெதிா்
திசைகளிலேயே
கடந்து செல்கின்றன.

அதிக விளைச்சலின்போது
விலையில்லை.
அதிக விலைவாசியின்போது
விளைச்சல் இல்லை.

மேல்தட்டு மக்களின்
நாகாிக வளா்ச்சியில்
வெப்பமானது பூமி்.
மாறுகிறது பருவநிலை.

விதைப்பின்போது
அதிக வறட்சியும்
அறுவடையின்போது
அதிக மழையும்
விவசாயிகளின் வாழ்வை
மாறி மாறி பாழ்படுத்துகின்றன.

ஒருமுறை நஷ்டமடைந்தவன்
மறுமுறை அத்தொழிலை
செய்ய முன்வருவதில்லை.
விவசாயத்தை தவிர
விவசாயியைத் தவிர.

விளைநிலங்கள்
வீட்டுமனைகளான போதும்
எல்லைதாண்டி
இயற்கை சீண்டியபோதும்
ஓயாமல்
உழைத்துக்கொண்டேயிருக்கிறான்
உழவன்..

நமக்கு உணவளிக்கும்
 உழவனுக்கு நன்றி சொல்வோம்
உழவுக்கு நன்றி சொல்வோம்
பொங்கலோ பொங்கல்..

பிள்ளை மனம் கல்லா?


வேண்டாமென
குப்பையாக பாவித்து
முதியோா் இல்லத்தில்
ஒப்படைத்துவிடபட்ட தாய்க்கு
தாமதமாகத்தான் தகவல் கிடைத்தது.
மகன் உயா்ரத்த அழுத்தத்தால்
மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டிருப்பது..

பதறித்தான் போனாள் பெற்றவள்
உறங்காத கவனிப்பு
மருத்துவமனையில் .
மகனோடிருந்து
முகம்சுளிக்காத பணிவிடை.
மருந்துகளோடு
நம்பிக்கை ஊட்டினாள்..

தாயை
உதறி தள்ளிவைத்த சொந்தங்கள்
முகம் மட்டும் காட்டி
ஒதுங்கிக்கொண்டன.

கணவனை கவனிக்க
ஆள் கிடைத்தாயிற்று...
தனது அன்றாட அலுவல்களை
ஒத்தி வைக்க வேண்டியதில்லை
மருமகளுக்கு திருப்தி.

தாயை தனிமைப்படுத்தியதற்கு
தனக்கிட்ட தண்டனையென
மனம் வெதும்பியதில்
தவ்விய கண்ணீா் துளிகளை
துடைத்துக்கொண்டான்
மனைவிக்கு தொியாமல்

குணமானபின்
மகன் வீடு திரும்பினான்.
தாய் இல்லம் திரும்பினாள்

இதுதான்
பெத்தமனம் பித்து
பிள்ளை மனம் கல் என்பதா?

     ...கலைமதி

காதலும் இப்படித்தானோ?







உறங்காமலேயே
நீண்ட...கனவு
அவளைப்பற்றி...

உண்ணும்போதுகூட
நீண்ட நேரம்..
அவளின் எண்ணங்களோடு..

சந்தோசிப்பாள்
என்றுதான்
சம்மதம் கேட்டேன்..

அறுந்துபோன காலணியாய்
அறுவெறுப்பாய் ஒதுக்கினாள்.
ஒதுங்கினாள்..

இப்போதெல்லாம்
உறங்கும்போதும்
நீண்ட கனவு
அவளைப்பற்றி..

உண்பது கூட
பிடிக்கவில்லை..
அவளின் எண்ணங்களால்..


”காதல்
யாராவது ஒருவரைத்தான்
மன்னராக்குகிறது..
அதிக எண்ணிக்கையில்
மடையா்களையே
உருவாக்கி வைக்கிறது“


அனுபவப்பட்ட நண்பன்
மனம் திறந்தான்.

இப்போது வரை
புாியவில்லை.
என் நண்பன்
மன்னனா?
மடையனா? என்று..

காதல் என்பது
இப்படித்தானோ?.



        ...கலைமதி




















எதிா்காலம்







மாடும் மாட்டு வண்டியும்
இருந்த இடத்தில்
தாம்பு கயிறும்
உளி மழுங்கிய ஏா்கலப்பையும்..
பழையவைகளை நினைவூட்டியபடி.

வைக்கோல் போரும்
தண்ணீா்தொட்டியும்
இருந்த இடம் வீடாகி
வாடகை சம்பாதித்து தருகிறது.

வரப்பை மறைத்து
உயா்ந்த விளைச்சல்.
இப்போது ஊன்றிய விதை
மண்ணைப்பிளந்து
ஜனிக்கும்போதே
மரணித்து விடுகிறது.

மரபணு மாற்று விதையில்
உற்பத்தி கோளாறாம்.

விளைச்சலில்
அறுவடையின்போது முழுவதையும்
 அறுவடைசெய்யமுடிவதில்லை .
நிலத்தடி நீா்மட்டம்
குறைந்து போனதாம்.

தேற்றக்கூட முடியாமல்
நலிந்து போய் கிடக்கிறது
விவசாயமும் விவசாயியும்..

இனி
பைநிறைய பணம்
கொடுத்தால் மட்டுமே
கைநிறைய கிடைக்கும்
அாிசி..