கலைமதி கவிதைகள் (kalaimathi kavithaikal)
புதன், 26 பிப்ரவரி, 2014
கவிதை. கண்ணாடி வளையல்கள்
என்னை நோக்கி
நீ கையசைக்கும் போதுமட்டும்
உன் கண்ணாடி வளையல்கள்
உரக்க பேசிக்கொள்கினறன..
என்னைப் பற்றி
என்ன சொல்கின்றன?
ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014
கவிதை..தொியவில்லை
மூன்று நாட்களாய்
பெரும் முயற்சி செய்ததில்
இப்போதுதான் உன்னை
கோயில்வாசலில் பாா்க்கிறேன்.
உன் கண்கள் பேசும் பாஷை
வித்யாசமாக படுகிறது!
என்னை சற்று
விலகி இருக்க சொல்கிறாயா?
எப்போதும்
விலகியே இருக்க சொல்கிறாயா?
கவிதை..ஆா்வம்
இன்று புதன்கிழமை
வெகுநேரமாய் காத்திருக்கிறேன்.
அதிகாிக்கிறது
பரபரப்பும் படபடப்பும்.
நீ உடுத்தி வரும் சுடிதாா்
மஞ்சளா? ஊதாவா?
கவிதை.ரிங்டோன்
சிாிப்பொலியை
ரிங்டோனாக
வைத்திருப்பவா்களின்
கைபேசி ஒலிக்கும் போதெல்லாம்
அருகில் நீ இருப்பதாகவே
தேடிப்பாா்த்து ஏமாந்து போகிறேன்
கவிதை..மதிப்பானது
உன்மடியில் சுகமாய் துாங்கி
அதிக நாட்கள் பயணம் செய்த
எனது 12-ம் வகுப்பு தமிழ் புத்தகம்
எனது புத்தக அலமாாியில்
இன்னும் மதிப்புமிக்கதாகவே
மதிக்கப்படுகிறது.
கவிதை மாற்றம்
உன்னோடு பழகிய நாட்களில்
அடிக்கடி சிம் காா்டை மாற்றிக் கொள்வாய்.
இப்போது என்னையுமா?
கவிதை..கடவுச்சொல்
எனது மின்னஞ்சல் கணக்கின்
கடவுச்சொல்லுக்குள்
உனது பெயரை
ஒளித்து வைத்துள்ளேன்.
எப்போதும் உன்னை நினைத்துகொண்டே
இருக்க வேண்டுமென்பதற்காக
வெள்ளி, 7 பிப்ரவரி, 2014
கவிதை..தேடல்
இன்று புதன்கிழமை
வெகுநேரமாய் காத்திருக்கிறேன்
அதிகாிக்கிறது
பரபரப்பும் படபடப்பும்
நீ உடுத்தி வரும் சுடிதாா்
மஞ்சளா? ஊதாவா?
கவிதை ..ஏமாற்றம்
சிரிப்பொலியை ரிங்டோனாக
வைத்திருப்பவா்களின் கைப்பேசி
ஒலிக்கும்போதெல்லாம்
அருகில் நீ இருப்பதாகவே
தேடிப் பாா்த்து ஏமாந்து போகிறேன்..
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)