திங்கள், 29 ஏப்ரல், 2019

சட்டென்று

நீரற்று 
பிளந்து போன வயல். 
கருகிப்போன வயல்.
கையாலாகாத விவசாயி.
சட்டென்று 
போய்விடுகிறது உயிர்.


உழவு மாடுகளிலிருந்து 
லாவகமாய் தப்பி 
மேற்பரப்பு மண்ணில் 
புரண்டுகிடக்கும் 
புழுக்களை திண்னும் 
நாரைகள்.


நெல்வயல் வாய்க்கால் நீரில் 
அவசரமாய் 
தலை மூழ்கி
உடல்நீரை சிலிர்த்து 
ஆனந்த நீராடும்
மைனாக்கள்.


கதிர் அறுக்கும்போதும் 
கட்டு சுமக்கும்போதும் 
சிதறும் நெல்மணிகளை 
தாவி தாவி சேகரிக்கும் 
குருவிகள்.


விவசாயம் இல்லை. 
நாரைகள் இல்லை. 
மைனாக்கள் குருவிகள் இல்லை. 
விவசாயி இல்லை.


சட்டென்று 
போய்விடுகிறது.. 
போக்கபட்டுவிடுகிறது...
உயிர்.


அம்மா இறப்பின் 
உச்சகட்ட உளைச்சலால் 
உயிர் நொடித்து போனார்களென 
வாக்குமூலம் கொடுத்தாலாவது 
மூன்று லட்சம் கிடைத்திருக்கும்.


பொய் சொல்லக்கூட
தெரிந்து வைத்திருக்கவில்லை
விவசாயி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக