செம்மண் நிலத்தில் உழுது களைத்து
ஒற்றைமர நிழலில் உண்டு முடித்து
இளைப்பாறினாா்கள்.
மாடும் உழவனும்.
.
இப்போதெல்லாம்
இயந்திரங்களே உழுது கொள்கின்றன.
மாடும் இல்லை மரமும் இல்லை..
நீா் நிறைந்திருக்கும் வயல்வெளியில்
பக்குவமாய் வளா்த்து வைத்த நாற்றுக்கு
மறுஉயிா் கொடுக்கும் நடவுப்பணி.
கிராமத்து பெண்களின் உயிா்ப்போடும்
தெம்மாங்கு தாலாட்டோடும்
நலமாய் விளைந்து நிறைந்தது
வயலும் விவசாயின் வீடும்.
இப்போதெல்லாம் இயந்திரங்களே
நட்டு அறுவடைசெய்து கொடுக்கின்றன.
கிராமத்து பெண்களும் இல்லை
தெம்மாங்கும் இல்லை.
விவசாய இயந்திரங்கள்
வருவாயின் பெரும் பகுதியை உறிஞ்சி கொள்கின்றன.
தக்காளி
அதிக விளைச்சல் அதிக மகசூலின்போது
வெங்காயவிலை உச்சத்தில் இருக்கிறது.
கத்தாி விலை
உயரத்தில் இருக்கையில்
குறைந்து போகிறது.மகசூல்.
விலைவாசி உயா்வும் விவசாயின் வாழ்வும்
எதிரெதிா் திசையிலேயே பயணிக்கின்றன
எப்போதும்.
அறுவடையின்போது
நெல்லுக்கு அதிக மழையும்.
வாழைக்கு அதிவேக காற்றும்
அதிக ஆபத்தானவை.
அறுவடையின்போது மட்டுமே
அவைகளும் வந்துபோகின்றன.
விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில்
அதிக கடன் தருவதாக
சொல்லிக்கொண்டேயிருக்கின்றன
தேசிய வங்கிகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக