இறந்து போன மவராசன்
கட்சி தொண்டனாம்..
சொந்த பந்தங்களை விட
அரசியல்வாதி போட்ட மாலைகளே அதிகம்.
ஆறுதல் சொல்ல
கலர் கலரா கரைவேஷ்டி கட்டி
யார் யாரோ வந்தாங்க...
என்னேன்னவோ சொன்னாங்க..
வாழ்ந்து போன மவராசன நெனச்சு
அழக்கூட விடல மவராசிய..
மயானம் வரைக்கும்
வழிநெடுக பேசிகிட்டாங்க..
"செத்தாலும் தேர்தல் நேரத்தில்
சாகனும்..
கொடுத்து வச்ச மவராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக