புத்தி தெளிந்துவிட்டது
திருந்திவிட்டோம்.
வழிபோக்கர்களை
பயமுறுத்தும்படி
தடுமாறி நடக்கமாட்டோம்.
நா கூசும்படி
நா கூசும் வார்த்தைகளை
உச்சரிக்க மாட்டோம்.
சாக்கடை ஓரமோ
குப்பைமேட்டிலோ
உடைவிலகி உணர்ச்சியற்று
படுத்திருக்கமாட்டோம்.
நல்ல மனிதராகவே
நடந்துகொள்ளுகிறோம்..
ஊருக்குள்
டாஸ்மாக் கடை நடத்த
இடம் தாருங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக