திங்கள், 29 ஏப்ரல், 2019

விவசாயம்

செம்மண் நிலத்தில் உழுது களைத்து
ஒற்றைமர நிழலில் உண்டு முடித்து
இளைப்பாறினாா்கள்.
மாடும் உழவனும்.
.
இப்போதெல்லாம்
இயந்திரங்களே உழுது கொள்கின்றன.
மாடும் இல்லை மரமும் இல்லை..

நீா் நிறைந்திருக்கும் வயல்வெளியில்
பக்குவமாய் வளா்த்து வைத்த நாற்றுக்கு
மறுஉயிா் கொடுக்கும் நடவுப்பணி.
கிராமத்து பெண்களின் உயிா்ப்போடும்
தெம்மாங்கு தாலாட்டோடும்
நலமாய் விளைந்து நிறைந்தது
வயலும் விவசாயின் வீடும்.

இப்போதெல்லாம் இயந்திரங்களே
நட்டு அறுவடைசெய்து கொடுக்கின்றன.
கிராமத்து பெண்களும் இல்லை
தெம்மாங்கும் இல்லை.

விவசாய இயந்திரங்கள்
வருவாயின் பெரும் பகுதியை உறிஞ்சி கொள்கின்றன.

தக்காளி
அதிக விளைச்சல் அதிக மகசூலின்போது
வெங்காயவிலை உச்சத்தில் இருக்கிறது.
கத்தாி விலை
உயரத்தில் இருக்கையில்
குறைந்து  போகிறது.மகசூல்.

விலைவாசி உயா்வும் விவசாயின் வாழ்வும்
எதிரெதிா் திசையிலேயே பயணிக்கின்றன
எப்போதும்.

அறுவடையின்போது
நெல்லுக்கு அதிக மழையும்.
வாழைக்கு அதிவேக காற்றும்
அதிக ஆபத்தானவை.
அறுவடையின்போது மட்டுமே
அவைகளும் வந்துபோகின்றன.

விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில்
அதிக கடன் தருவதாக
சொல்லிக்கொண்டேயிருக்கின்றன
தேசிய வங்கிகள்.

குழந்தையின் ஏக்கம்

இப்போதெல்லாம் பள்ளி பேருந்தில்
ஜன்னலோர இருக்கையிலமா்ந்து
பயணிப்பது சந்தோசம் கொடுப்பதில்லை.

பருவத்தில் பயிா்செய் என
கற்பிக்கும் ஆசிாியை விளையாட்டு பருவத்தை
விளையாட அனுமதிப்பதில்லை.

தொியாத பாடத்தை
சாியாய் ஒப்புவிக்கும் தோழிக்கு பாராட்டும்
தொிந்த பாடத்தை
அழகாய் விவாிக்கையில் எனக்கு ஏளனத்தையும்
வகுப்பறை பாிசளிக்கிறது.

பள்ளி முடிதலுக்கும் டியுசன் ஆரம்பித்தலுக்கும்
இடைப்பட்ட கணநேரத்தில்கூட
விளையாட முடிவதில்லை.

அலுவலகங்கள் முடிந்தவுடன்
அப்பா மடிக்கணிணுக்குள்ளும்
அம்மா தொலைக்காட்சி தொடருக்குள்ளும்
மூழ்கிப்போகிறாா்கள்
என்ன எடுத்தாா்களோ?

இப்போதெல்லாம் பள்ளி பேருந்தில்
ஓட்டுநருக்கு அருகிலிருக்கும் முன் இருக்கையை
ஆசிாியை விட்டுகொடுத்தபோதும்
மகிழ்ச்சி கொடுப்பதில்லை.

இரவு உறங்கும் முன்
அப்பாவும் அம்மாவும்
இன்றும் கேட்கவில்லை!
மதிய உணவை மீதம் வைக்காமல்
சாப்பிட்டாயா என்று

வாக்கு

... வாக்கு

அரை ஆடை உடுத்தி

அரசுக்கு கவனம் சொன்னோம்..

கண்டு கொண்டார் இல்லை..


சாலை மேம்பாட்டுக்கென

பிள்ளையென வளர்த்த

விளைநிலம் பறிகொடுத்தோம்.

போனது பாதி உயிரும்

வாழ்வாதாரமும்..

மீட்டு கொடுப்பார் இல்லை..


தன் பங்கு என கஜாவும்

இடை ஆடையையும்

பறித்து கொண்டது..

கவனிப்பார் இல்லை..


உலகுக்கு

உணவளிப்போர் நாங்கள்..

எங்களிடம்

கையேந்தல் இல்லை..

எங்களுக்கு

வாக்குக்கு பணம் வேண்டாம்..

வாழ்ந்து கொள்ள

நம்பிக்கை கொடுங்கள் போதும்..

உங்களுக்கே வாக்கு...


மவராசன்

இறந்து போன மவராசன்

கட்சி தொண்டனாம்..

சொந்த பந்தங்களை விட


அரசியல்வாதி போட்ட மாலைகளே  அதிகம்.

ஆறுதல் சொல்ல


கலர் கலரா கரைவேஷ்டி கட்டி


யார் யாரோ வந்தாங்க...


என்னேன்னவோ சொன்னாங்க..


வாழ்ந்து போன மவராசன நெனச்சு


அழக்கூட விடல மவராசிய..

மயானம் வரைக்கும்


வழிநெடுக பேசிகிட்டாங்க..


"செத்தாலும் தேர்தல் நேரத்தில்


சாகனும்..


கொடுத்து வச்ச மவராசன்


சட்டென்று

நீரற்று 
பிளந்து போன வயல். 
கருகிப்போன வயல்.
கையாலாகாத விவசாயி.
சட்டென்று 
போய்விடுகிறது உயிர்.


உழவு மாடுகளிலிருந்து 
லாவகமாய் தப்பி 
மேற்பரப்பு மண்ணில் 
புரண்டுகிடக்கும் 
புழுக்களை திண்னும் 
நாரைகள்.


நெல்வயல் வாய்க்கால் நீரில் 
அவசரமாய் 
தலை மூழ்கி
உடல்நீரை சிலிர்த்து 
ஆனந்த நீராடும்
மைனாக்கள்.


கதிர் அறுக்கும்போதும் 
கட்டு சுமக்கும்போதும் 
சிதறும் நெல்மணிகளை 
தாவி தாவி சேகரிக்கும் 
குருவிகள்.


விவசாயம் இல்லை. 
நாரைகள் இல்லை. 
மைனாக்கள் குருவிகள் இல்லை. 
விவசாயி இல்லை.


சட்டென்று 
போய்விடுகிறது.. 
போக்கபட்டுவிடுகிறது...
உயிர்.


அம்மா இறப்பின் 
உச்சகட்ட உளைச்சலால் 
உயிர் நொடித்து போனார்களென 
வாக்குமூலம் கொடுத்தாலாவது 
மூன்று லட்சம் கிடைத்திருக்கும்.


பொய் சொல்லக்கூட
தெரிந்து வைத்திருக்கவில்லை
விவசாயி.


வெள்ளி, 7 ஏப்ரல், 2017

டாஸ்மாக் நிலை

புத்தி தெளிந்துவிட்டது
திருந்திவிட்டோம்.

வழிபோக்கர்களை
பயமுறுத்தும்படி
தடுமாறி நடக்கமாட்டோம்.

நா கூசும்படி
நா கூசும் வார்த்தைகளை
உச்சரிக்க மாட்டோம்.

சாக்கடை ஓரமோ
குப்பைமேட்டிலோ
உடைவிலகி உணர்ச்சியற்று
படுத்திருக்கமாட்டோம்.

நல்ல மனிதராகவே
நடந்துகொள்ளுகிறோம்..

ஊருக்குள்
டாஸ்மாக் கடை நடத்த
இடம் தாருங்கள்.

கேள்வி

சாம்பாரில்
உப்பின் அளவு சரியா
என்பதை
பரிமாறுகையில் கேட்டால் பராவாயில்லை.
ஊட்டி விடுகையிலா
கேட்பது.