செவ்வாய், 31 மே, 2016

கவிதை. .நெருக்கமாக

ஒரிடத்தில் நிற்காமல்
மேலும் கீழும்
அலைந்து கொண்டிருக்கும்
உன் வளையல்கள்.
வாயாடிகள்.

ஒரிடத்தில் இருந்துகொண்டு
நெருக்கமாக இறுக்கத்தோடு
உன் விரல் 
ஒற்றைக்கல் மோதிரம்
சாந்த சொருபி.

உன்னோடு எப்போதும்
நெருக்கமாக இறுக்கத்தோடு
உன் மோதிரமாய்

வெள்ளி, 27 மே, 2016

கவிதை. ..மாடுகள்

ராமகாதையில்
நால்வரோடு ஐய்வரான குகன்போல
எங்கள் குடும்பத்தோடு
எங்கள் மாடுகள்.

அப்பாவின்
உழவுக்கு உதவுவதிலும்
எங்களுக்கு
சினிமா செல்ல உதவுவதிலும்
மாடுகளே கதாநாயகன்கள்.

மாடுகளின் உதவியில்
விளைச்சல்  செழித்தது.
நாங்கள் செழித்தோம்.
எங்களின் உயர்பதவிக்கு
ஆதாரம் மாடுகள்.

மழை ஆரம்பிக்கும் சமயங்களில்
மண்விடும் வாசனையைவிட
மாடுகளின் அருகே வீசும்
வாசனை புதுமையானது.
சுகந்தமானது.

உழுது களைத்தவுடன்
உண்பதற்கும் உறங்குவதற்கும்
ஒற்றை வேப்பமரம்.
மரமுமில்லை. மாடுகளுமில்லை.
நிழலுமில்லை.நிலமுமில்லை.
வெப்பமாகிறது பூமி.

என் மகன் கட்டிய புதுவீட்டில்
கம்பீரமாய் இரண்டு மாடுகள்
வரவேற்பரை அலமாரிகளில்.
இவைகள் தான் மாடுகள் என
பேரனுக்கு அடையாளம் காட்ட.

வியாழன், 26 மே, 2016

கவிதை ..சம்மதம்

ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு விதமாய்
உன்னிடமிருந்து சம்மதம் எதிர்பார்த்து
கோரிக்கை வைக்கும் போதெல்லாம்
மெல்ல நகுதலையே
கடைபிடிக்கிறாய் எப்போதும்.

கண் மூடி திறக்கும்
கண் நேரத்திற்குள்
வந்து போகும்
உன் மீதான கோபத்தை
மறைந்து போக செய்து விடுகிறது
உன் பார்வை.