ஞாயிறு, 9 மார்ச், 2014

கவிதை..அா்த்தம்

மரச்சட்டத்தில்
உயிருள்ள ஓவியம் காண்கிறேன்..
 நீ ஜன்னலோரம் அமா்ந்திருக்கிறாய்.

அழகான கவிதை உணா்கிறேன்
 நீ பேசுகிறாய்.

இனிமையான இசை கேட்கிறது.
நீ சிணுங்குகிறாய்.

கண்முன்னே பறக்கும் பட்டாம்பூச்சிகள்
நீ கண்சிமிட்டுகிறாய்.

மொட்டைமாடியின் கீழ் சாரலில் நனைகிறேன்.
நீ தலைதுவட்டுகிறாய்.

கனவில் பூக்களை ரசிக்கிறேன்.
நீ சிாிக்கிறாய்.

உச்சிவெயிலில் தென்றல் தாலாட்டுகிறது.
நீ கடந்து போகிறாய்

நீ மௌனக்கிறாய்.
அா்த்தம்தான் புாிந்துகொள்ளமுடியவில்லை.

                    ....கலைமதி